Monday, June 29, 2015

காவியம்- காப்பு

           பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.



~சுனாமி| கடற்கோள் காவியம்.

‘தீரன்.’ ஆர்.எம். நௌஸாத்.







2004.12.26 ம் திகதிää காலை 9.00 மணியளவில் 
இந்தோனேசியக் கடலில்
ஏற்பட்ட புவியதிர்வு காரணமாக உருவான இராட்சத சுனாமி அலைகள் தென்கிழக்காசிய நாடுகளைத் தாக்கிää சுமார் இரண்டு இலட்சம் மக்களைக் கொன்றொழித்துää இலங்கையில் ஏறக்குறைய நாற்பத்திரண்டாயிரம் பேரைப் பலியெடுத்துää இலங்கையின் கரையோரப் பகுதிகளையும் பாரிய அழிவுக்குள்ளாக்கியது. இக் கடற்கோள் அனர்த்தம் காரணமாகää இயற்றப்பட்ட~சுனாமி| கடற்கோள் காவியம் இது.




காப்பு.



சோதிமுதல்  ஓதும்பொருள் ஆதிபுகழ்    ஞாலமெல்லாம்
ஆதியிறை  ஏகபொருள்  வாரியிறை  ஞானமெல்லாம்
ஆதிமுதல்   ஈதுவரை    மீதியுள     காலமெல்லாம்
மேதியினில் சோதிபுகழ் ஓதிடுவேன் உள்ளமெலாம்.




ஸலவாத்.


முழுமதி      பொழியொளிர் எழில்  முகமது
இறைவழி    ஓழுகிடும்    நபி   முஹமது
திருநபி      மொழிவழி    தனில் அகமது
மொழிகிற    நபிபுகழ்     தனி   லுருகிடும்.



அவையடக்கம்.



முன்னோர்தமை     பின்பற்றி          ஒருகாவியம்
என்.ஏ. தீரன்       பேர்தாங்கி         தமிழோவியம்
வண்ணமுறத்       தீட்டுகிறேன்        இதுகாவியம்.
எண்ணுகிறேன  ;    ஏகனிறை          இதுகாரியம்.


யாப்பறியேன்       நவ்ஸாத்          காரியப்பர்நான்
ஏர்ப்படைசூழ       ஏருழவரை         நேரியவாட்சி
ஓர்ப்படச்செய்த      மீர் ராஸிக்         காரியப்பர் தன்
  பொற்புடைமாது    ஹாஜரா நல்      மாதுசிரோண்மணி
மூத்தபுதல்வன்       பிதற்றலிது        பொறுத்தருள்வீர்.





சமர்ப்பணம்.




கரையுடைத்துக் கடல்பொங்கித் தரை கடந்து தாவி வர
துறைகடந்து விரைந்தேகிய சாய்ந்தமருது மக்களை
அரவணைத்து ஆதரவளித்த
சம்மாந்-துறை மக்கள் தமக்கே அர்ப்பணம் இந்நூல்.




உள்ளுறை



இரண்டா யிரத்தோர் நான்கா மாண்டுபதின் இரண்டா மாதமீர்
பத்தாமாறாம்நாளில் உருண்ட பூமியோர திர்வால் ஆழிபொங்கித்
திரண்டதால் தீவும்ää எமதூரு மழிந்தமை.
2004.12.26.
00



முதற்பா:-     தீவு முழுவதும் ஆழிச் சீற்றம்.

இரண்டாம் பா:- சுனாமிக் கும்மி.

மூன்றாம் பா:-  சாய்ந்தமருது அழிந்த காதை.

No comments:

Post a Comment