Monday, June 29, 2015

மூன்றாம் பா - சாய்ந்தமருது அழிந்த காதை


                         மூன்றாம் பா


சாய்ந்தமருது  அழிந்த   காதை.



என் செல்ல மகளாரேää
நான் பாடும் பாட்டினைக் கேளாயோ..
என் செல்ல மகளாரேää
நான் பாடும் பாட்டினைக் கேளாயோ..

01
இரண்டா    யிரத்து      நாலாம்     ஆண்டு
புரண்டமா    ர்கழி       இருபத் தி    யாறு
அரண்டகா   லையெட்டு   நாற்பத் தி    யாறு
திரண்டதோ  ரலை       சுனாமிய    தன்பேரு.

02.
சுனாமிய    தன்பேரு     பாய்ந்தது    மருதூரு
கனாவிலு    மதனைக்    கண்டதிலை  மகளாரு
அம்மாடி     யம்மாடி     எப்ப டிச்    சொல்லுவது
எண்ப       தடியெழுந்   தெட்டியது   பாய்ந்தது.

௦3.
பாய்ந்த     அலையின்   பயங்கரக்    காட்சி
சாய்ந்த     மருதினை    அழித்தது    தாக்கி
சூழ்ந்த      சுனாமியைப்  பாட்டினில்   வார்த்து
தேர்ந்த      தமிழினில்     ஏட்டினில்    கோர்த்து

04.
கோர்த்தெ    டுத்துக்      கோரத்தைச்  சொல்ல
ஆர்த்த      லையின்     அவலத்தைச்  சொல்ல
பார்த்த      றிந்தொரு    பாட்டினில்    சொல்ல
கேட்ட      ழுதவிழி     நீரினில்       மூழ்க..

05
மூழ்கிக்    குளித்து     நீந்திக்      களித்தே
வாழப்      பழகிய      உன்மக்     கள்மீதே
ஊழியே     நீலியே      சுனாமியே   வந்தாய்
ஆழியே     சீலியே      சீறியேன்     பாய்ந்தாய்.

௦6.
பாய்ந்தது    முதலலை    உயிர்களு மாழ்ந்தன
தா ழ்ந்த    நிலமெலாம்   தாழுண்டு மூழ்கின.
வேய்ந்த     வீடெலாம்    வேகத்திலு டைந்தன
ஆழ்ந்த     ஆழியில      ள்ளுண்டு  போயின

07.
போயின     வீடுகள ;     பேரலை     யடிபட்டு
ஆயின      தூசுகள்     மாடங்கள்    பொடிபட்டு
தாண்டிய    கடலலை    தரைகளைத்  தாக்கிற்று.
அண்டிய     பிராணிகள்   பறவைக     ளழிந்திற்று.

08.
அழிந்தன    கட்டுவலை   வள்ளங்கள்   தோணிகள்
ஒழிந்தன    கட்டுமனை   இல்லங்கள்   காணிகள்;.
ஆழ்ந்தன    திட்டுமணல்  மையித்துகள் நெருங்கின.
தாழ்ந்தன    போட்டுகள்   மதில்கள்    நொறுங்கின

09.
நொறுங்கின  கடைகள்    மரங்கள்     வீடுகள்
ஓதுங்கின    பாரிய வி    ட்டங்கள்     ஓடுகள்;
சொருகியே   தள்ளின     செத்த      வுடல்களை
பெருகியே   பாய்ந்தது    ரெண்டாம்   கடலலை

10.
கடலலை    பெருகுது    மறுபடி      வருகுது
கதறினர்     பதறினர்     கல்புகள்     உருகுது
எதுவரை    யோடுவ     தெப்படித்    தப்புவது
கடல்கரை    யுடைத்துக்   கடிதினில்    வந்தது.

11
வந்த       சுனாமி      யதுமோதி   யுடைத்திட
அழிந்த     தாயிர      மனைத்து    ம்விட்டிடப்
பறந்தனர்    பாதையில்   நெரிசலில்   முட்டினர்
இறந்தன     ரிடையினில்  வயோதிபர்   சிக்கினர்

12
சிக்கினர்     மூழ்கினர்    மற்றவ      ரோடினர்
தூக்கினர்    சாத்தினர்    விட்டவர்     தேடினர்
மாவடிப்     பள்ளிவீதி    மஹ்;ஸர்   வெளியாமோ
கூறடி       பாய்வதும்   மனிதக்      கடலாமோ

13.
கடலுக்குப்   பயந்தவர்    கார்களி     லேறினர்
இடம்விட்டு   ஓடுமுன்ன    ரிருப்பது     சுருட்டினர்
சிறுவர்கள்   கதறினர்     சிக்கியுயிர்   இழந்தனர்
ஒருவரை    யொருவர்    மயிரென    மறந்தனர்

14.
மறந்தனர்    விரைந்தனர்  வாகன      மேறினர்
சரிந்தனர்    சம்மாந்     துறைக்      கேகினர்
இழிந்தனர்   பெண்டிரைக்  கைவிட்     டோடினர்
இழிசனர்     நெஞ்சினில்   இறைவனை  மறந்தனர்.

15.
மறந்தக     ணவர்கள்    மனைவியை  இழந்தனர்
பதறிய      மனைவியர்   கணவரை    இழந்தனர்
பறந்தனர்    மழலைகள்   கைவிட்     டிழந்தனர்
உதறினர்    சொந்தங்கள்  தாமட்டும்;    பிழைத்தனர்;

16.
மட்டிலாப்    பயத்தினில்   திகைத்துச்   சிலபேர்
கட்டிட      இடிபாடு     களில்       சிக்கினர்
தட்டுமா     றி;ப்பலர்     தத்தம்      அன்பரை
விட்டிட      மனமின்றி    கட்டியே     மூழ்கினர்

17
மூழ்கினர்    பாய்ந்தது    மூன்றா      மலையதும்
ஊழ்வினை   சூழ்ந்தது    ஊரை      யழித்தது
வாழ்வினைக்  காவு       கொண்ட    கணங்களில்
வைதனர்    ஊரினில்     மீதியுள     சனங்களும்

18.
சனங்கள்    செறிந்த     காரியப்பர்   நகரதில்
சு னாமி     சீறிப்       புகுந்த      ழித்ததில்
வணங்கு     மிறையைக்   கூவிக்      கதறியே
சனங்கள்    சவங்க      ளாகிச்      சிதறியே

19
சிதறினர்     கடற்கரை    வாசிகள்     மீனவர்
பதறிய      மழலைச்    சிறுசுக      ளானவர்
மிதந்ததைக்  கண்டவர்    உயிர்காத்து  மீண்டனர்
அமிழ்ந்தனர்  ஆழியில்    ஆள்மாறி    மாண்டனர்

20
மாண்டனர்  தோணாத்    தொங்கலி லிருந்தவர்
கண்டனர்   ஓரலை      உச்சி    மீறிவரக்
கண்டவர்   விண்டிலர்    விண்டவர்  கண்டிலர்
என்பவர்    போலவர்    அக்கணம்  மரித்தனர்

21.
மரித்த      சிறுசுகள்;    கண்டசி     லபெண்டிர்
சிரித்தனர்    பயத்தால்    சித்தமி      ழந்தனர்
உரிந்த      புடவையும்   மறந்த      நோயவர்
விரிந்த      தலையுடன்   விசருத்      தாயவர்

22.
தாயவர்     தந்தவ      முதுண்டு    ஓதப்பள்ளி
சேயவர்     போயினர்    மூழ்குண்டு   மீளாப்பள்ளி
தாயவர்     பதறினர்     பைத்திய    மாயினர்
தூயவர்     சிறுவ       ரள்ளுண்டு   போயினர்.

23.
போயினர்    இன்னும்     மல்ஹருஸ்   ஷஸம்ஸில்
சேயினர்     தொங்கினர்   கூரையி     னுச்சியில்;
ஏங்கினர்     ஓடினர்      பட குத்     துறையதும்
தாங்கிய     பாலமும்     தறிபட்டு     முறிந்ததை

24.
முறிந்ததைக்  கண்டனர்    தோணாத்    திடலில்
மிதந்ததைக்  கண்டனர்    மீனவ       ருடல்கள்
சரிந்தது     அல்ஜலால்   மாணாக்     குவி யல்
தெரிந்தது    பள்ளிமா    ணவிக      ளுடல்கள்

25.
உடல்கள்    றியாலுல்   ஜன்னாப்      பள்ளியுடன்
கடலுள்     மறைந்த    காலக்       கொடுமை
வைத்திய    சாலையும்   றிஸ்வி      டொக்டரும்
விவசாயக்   கந்தோரும்   ஒஸ்மன்     வீ தியும்.

26.
ஒஸ்மன்     வீதியில்     வீடுகளை    முறித்துப்
பஸ்ப       மாக்கிப்     பாடாய்ப்    படுத்தி
சாஹிpறா     வீதியில்   ச வங்கள்    தள் ளி
ஆஹிறம்     அழித்;துப்    பாய்ந்தது    சு னாமி

27.
பாய்ந்தது    கலியாண    ரோட்டு    வரையிலும்
சாய்ந்தம    ருதூரைப்   போட்டுக்    குதறியே
நூற்றுக்     கணக்கினில்  போட்டுக்    களள்ளி
தீற்றித்      திணித்தது   மோட்டு     வளைகளில்;

28
மோட்டு     வளைகளை  மோதிவி;     ழுத்தி
ரோட்டு      முழுக்கவும்   போட்டுக்    குதறி;
மார்க்கட்    ரோட்டும்    மக்கள்      கடையும்
மூர்க்கச்     சு னாமி     மோதிக்     குடைந்து

29.
மோதிக்     குடைந்தது   பாளிகா     ரோட்டை
பாதியு      டைத்தது    மாளிகைக்   காட்டை
எட்டிப்      பாய்ந்தது    பொம்பிளச்   சந்தை
வெட்டிப்     பிளந்த      வேகத்தில்   கந்தை

30.
கந்தை      யாச்சுது     பீச்சுக்      கோட்டலும்
சங்கம்      சேர்ந்த      மீனவர்      கோட்டமும்
கடலோ     ரங்கட்டிய    ஹுஸைன்  வித்தியமும்
கடலோ     டுபோச்சுது   அந்தோ     பரிதா பம்.

31
பரிதா       பம்மிஞ்சி    எதுவு       மில்லை
கடலோ     ரம்வாழ்ந்    ததடமு      மில்லை
பாளிகா     முதலாய்    மாளிகா     வீறாய்;
ஆழிய      யடித்த      தத்தனையும்  தூளாய்.

32.
தூளான     ஊரான    தே யென    வழுது
ஆளாள்     அறியா     மலைந்த    பொழுது
ஓங்கியொ    ருபாங்கின்   சத்தம்      கேட்டினர்
சாய்ந்த     மருதூர்     பள்ளியை    நா டினர்

33.
நாடினவன்   செய்தனன்   நாமெந்த    மட்டுக்கு
ஓடித்தப்பி    யவரார்     ம ரணம    தைவிட்டு
வேடிக்கை   மனிதரே     வேகத்தை   விடுங்கள்
நாடிக்கை    யேந்தியிறை  பாதத்தில்    வீழுங்கள்.

34.
வீழுங்      களிறை     பள்ளியில்    தொழு து
கேளுங்     களிறை     வனிட       மழு து
எங்க       ளிறைவனே   ஏகப்பெரும்   பொருளே
தங்க       நபிகளைத்   தந்தபரம்    பொருளே.

35.
பொருளும்   பொன்னும்   அளித்      தவன்நீ
உயிரும்     உடலும்     அளிப்      பதும்நீ
அருமை     நபிகள்      ரஸ_லின்    பொருட்டால்
சீறும்  சு    னாமியைத்   தணித்தருள்  அல்லாஹ்

36.
அல்லாஹ்  வருளது     சுனாமி      தணிந்தது
எல்லா      வழியிலும்   ஆழிதி      ரும்பியது
எந்த       இடத்திலு    மையித்துக்   குவிந்தது
வந்த       வரத்தினில்   பள்ளிநி     றைந்தது.

37.
நிறைந்த    வுடலெலாம்  பெண்களும்  சிறுவரும்
குறைந்த    அளவினில்   ஆண்களும்  தவிரவும்
அங்க       வீனர்களும்   அதிகம்    இருந்தனர்
எங்கு       மடுக்கிப்     பள்ளி      நிறைந்தன.

38.
நிறைந்த    உடல்களை  அடையாளம்   கண்டு
விரைந்து    குளிப்பாட்    டிக்கபனு      மிட்டு
தரைகள     தோண்டும்   வாகனம்     கொண்டு
விரைந்து    கபுறுகள்     தோண்டி     அடக்கி..

39.
அடக்கத்     தலங்களும்   அழிந்து     போனதில்
அடக்கினர்   வளவெலாம்  நூற்றுக்     கணக்கில்
அடங்க     வில்லை     பள்ளியும்    குறைக்கு
அடக்க      வனுப்பினர்   சம்மாந்     துறைக்கு.

40
சம்மாந்     துறையில்  மலையடிக்   கிராமம்;
எம்மாத்     திரந்தான்  கபுரடிக்      கம்பம்.
ஆயிரக்     கணக்கில்  மையித்துக்   கும்பம்
சாய்ந்த     மருதினில்  மட்டுமூ      வாயிரம்

41.
ஆயிரம்     அழுகுரல்    ஆரையார்   தேற்றிவிட
ஆயிரம்     அவலங்கள்  ஆரிடமார்    கூறிவிட
எத்தனை    பாவங்கள்    செய்தமோ   இப்பேரழிவு
இத்தனை    காலமும்    எமக்கில்லை  இச்சீரழிவு

42.
சீரழி       வில்லை     சீவராசி     பலதுக்கு
ஓர்நாழி     முன்னமே    உள்ளறி     வதற்கு
பேரழி      வருமென்    றுணர்வா    லறிந்தன
ஓராழி      வருமென்று   ஓடோடித்    தப்பின

43.
தப்பின      பறப்பன     நடப்பன     கணக்கின்றி
அப்பின      ஊர்வன     வாயிரக்     கணக்கினில்
கட்டின      பிராணிகள்   தப்பமுடி     யவில்லை
பூட்டின      பறவை ப    றக்கமுடி     யவில்லை

44.
இல்லை     நுண்ணறி    வாறறிவு     மாந்தரும்
இல்லிடம்    தேடினர்     ஓடினரங்     கிங்கணும்
இல்லை     யொரு      பொருளும்   மாய்ந்தனர்
அல்லா      அல்லா     எனக்கத்திக்  காய்ந்தனர்

45.
காய்ந்த     வெய்யிலில்  மாவடிப்     பள்ளியில்
சாய்ந்து     கிடந்தனர்    மாய்ந்து     மயங்கினர்
மெய்யோ    விதுவோ    வாழிடமோ   கிளியே..
ஐயோ      விதியோ     ஆருசெய்    தபழியோ..

46.
செய்த      பழியே து    மில்லை     கிளியே
செய்ய      நினைத்     தவன்செய   லிதுவே
வையத்     தினர்க்கு     வல்லவன்    வே தம்
ஐயம்       திரிபறச்     சொல்லும்   பா டம்..

47.
பாடம்      படித்த      பாலர்மு     தற்கொண்டு
பாடம்      மறந்த      பாட்டியர்    வரையீண்டு
அபயம்     தந்தது      சம்மாந்     துறைதான்
உபயம்     தந்ததும்     எம்மாத்     திரந்தான்.

48.
எம்மாத்     திரம்       சனத்       திரளுக்கும்
அம்மாத்     திரம்       சாப்பா      டளித்தும்
தம்மாந்     தரைப்      போலத்      தவித்தனர்
சம்மாந்      துறை       மக்களு     த வினர்

49.
உதவினர்    சாய்ந்த     மருதுக்     கோடிவந்து
உறவினர்    போலவர்    எம்மைத்    தேடிவந்து
சிதைவுகள்   கண்டனர்    சித்தம்      நடுங்கினர்
முதல்வேலை மையித்து    களப்புறப்    படுத்தினர்

50.
அப்புறப்     படுத்தினர்    டிப்பரி      லேற்றினர்
துப்புரவு     செய்தனர்    துணிக்கப    னிட்டனர்.
தொண்டர்    குவிந்தனர்   தோண்டி     முடித்தனர்
அண்டம்     குலுங்கிட    அறபியி;     லோதினர்

51.
ஓதிய       சேதிகள்     உலகினில்   ஒலித்தன
மோதிய     சுனாமிமு    கத்திலு      மிழ்ந்தன.
ஓடியே      வந்தன      ஊடகப்     பாயிரம்
தேடியே     பரப்பின     செய்திக     ளாயிரம்.

52.
ஆயிரம்     சேதிகள்     சுடச்சுடத்    தந்தனர்
ஆயிரம்     மின்னணு    ஊடகத்     துறையினர்
கண்டனர்    தொலைக்காட்சிவானொலி   விமர்சனம்
இன்டனெ    ட்டிலும்      நேரடித்      தரிசனம்.

53.
தரிசனம்     காணாமற்   தேடித்      தே டி
புரிசனெங்    கேடிபிள்     ளையெங்    கே டி
இனசன      மெங்கேடி    கண்ட வி    டங்கூறடி
ஒருசனம்    அறிமுக     மில்லேடி      நேரடி

54.
நேரடித்     தரிசனம்     உறவுகள்    உபகாரம்
கேளடி      கண்மணி    அருமை     மகளாரே
ஓட டி      தேட டி     எங்கோடிப்   போயினர்
ஓடோடித்    தேயாடிப்    பேயாடிப்    போயினர்;.

55.
பேயாடிப்    போயிற்     றுச்சுனா     மி யலை
ஈயாடிப்     போயிற்     றுத்தீராக்    க வலை
பாராளும்    மன்னரும்    மற்றோரும்   வருகுவர்
தாராளம்    பேசுவர்      வேறென்ன   செய்குவர்

56.
செய்தனர்    படையின    ருதவிக     ளாயிரம்;
அரசினர்     அனுப்பினர்   உணவுக    ளாயிரம்
வந்தனர்     பண்ணாட்டுத்தொண்டர்     நிறுவனம்
தந்தனர்     உடைகள்    மருந்துக    ளாயிரம்.

57.
ஆயிரம்     கம்பளி     கள்மாத்     திரைகள்
நோய்நீ     க்கிமருந்    துகள்       நாசினிகள்
இன்னும்     எத்தனை    யோவிதப்    பொருட்கள்
பின்னும்     குவிந்தன    பன்னாட்     டுதவிகள்

58.
உதவிக     ளாயிரம்     குவிந்த    போதிலும்
பதவியி     லுள்ளோர்   பகிர்ந்த     போதிலும்
இதயமி     னித்தவர்     மீண்டு      வருவரோ
கதையா     னவாழ்வை   மீளத்       தருவரோ..

59.
தருவது     மெல்லா     மவனது     செயல்தான்
வந்ததும்    போனதும்    அவனது     அருள்தான்.
எந்தவி      றைவனை    ஒப்புக்      கொண்டமோ
அந்தவி     றைவனே    அழித்துக்    காப்பதும்

60.
அழித்துக்    காப்பதில்    போதனை    பெற்றோம்
விழித்து     எழுவோம்    வேதனை    விட்டோம்
சோதனை    வெல்வோம்  சாதனை     செய்வோம்
சாய்ந்த     மருதினை    மீளவும்      கட்டுவம்

61.
கட்டுவம்     வீ டுகள்     கடைகள்    கண்ணிகள்
வெட்டுவம்   வாய்க்கால்   பாலங்கள்    தோணிகள்;
நட்டுவம்     பச்சைகள்    நாட்டுப்புற   காய்கறிகள்
எட்டுவம்     எங்களது    ஏற்றமிகு    லட்சியங்கள்

62.
லட்சியம்    கொள்ளுவம்  கல்விகள்   வளர்;ப்பம்
உச்சி       மேடெல்லாம் களனிகள்   செய்குவம்
உள்ள      விடமெல்லாம் கணணிக   ளாக்குவம்
அல்லா     உதவியால்   அகிலங்க   ளாளுவம்.

63..
அகிலங்     களழித் த    சுனா மிப்    பாட்டை
அகிலத்     தோருக்     கும்பாடிக்    காட்ட
அருளிச்     செய்தான்    அல்லாஹ்  பெரியன்
அகிலப்     புகழுக்கு    மவனே      உரியன்

64.
அவனே     உரியவன்    அனைவர்    பாட்டுக்கும்
என்னே      தீ ரன்      இணையார்   ஈட்டுக்கு
இவனே      உரியவன்    சுனாமிப்     பாட்டுக்கு
என்.ஏ.      தீ ரன்      ஆனேன்     ஏட்டுக்கு.

65.
ஏட்டுக்      கடங்கா     எழுத்தில்    முடியா
பாட்டுக்     கடங்காப்    பாடியி      முடியா
மட்டுக்      கடங்கா     மரணப்      பினாமி
கட்டுக்      கடங்கா     ஆழிச்      சுனாமி.

              66.
ஆழிச்சு     னாமியால்   வந்த       அழிவை
பாடிச்சு      மைகுறை    ந்தேன்      மகளே..
ஏந்தியி      ருகரம்      என்றுமி     றையிடம்
கேளடி      கேளடி      கண்ணீரு    மேனடி..

67.
கண்ணீர்     துடைப்பாய்  க வலை    விடுவாய்
தண்ணீர்     ஆழ்ந்த     ஆத்மா      நினைப்பாய்
கண்ணின்    மணியாம்    ரஸ_லின்    மகளாம்
அன்னை     பாத்திமா    வழியில்     நடப்பாய்.

68.
நடப்ப      வர்நபிவழி   நல்லவரும்   வாழ்க
படைத்த     இறையவன்   சொற்படி    வாழ்க.
வடித்த      கா வியம்    கேட்டவர்    வாழ்க.
படித்தவர்    பார்த்தவர்    யாத்தவரும்  வாழ்க.



என் செல்ல மகளாரேää
நான் பாடும் பாட்டினைக் கேளாயோ..
என் செல்ல மகளாரேää
நான் பாடும் பாட்டினைக் கேளாயோ..


             (காவியம் முற்றிற்று.)

No comments:

Post a Comment